சர்வம் சிவ-சக்தி மயம்
சிவத்தைச் சவமாக்கி,
சக்தியை மட்டுமே உருவாக்கி;
தாயைப் பொருளாக்கி,
சேயை உருவாக்கி;
பண்பாட்டைப் பயன்பாடாக்கி,
வீட்டை உருவாக்க,
காட்டை வீணாக்கி,
நாட்டை யுத்தகளமாக்கி,
இப்படி எல்லாவற்றையும் வீணாக்கி,
மனித வாழ்க்கையைப் பாழாக்கியதென்ன விநோதமோ!
---------------------------------------------புறவெளி இருட்டில்,
உள்ஒளி வெளிச்சமாய்,
சிந்தனைத் தெளிய,
அகமுகம் மலர,
புறமுகம் பிரகாசிக்க,
கண்ணொளி பெற்று,
இருப்பதின் தன்மையால் காணப்படுவது
கட + உள் = கடவுள்.
---------------------------------------------"எல்லோரும் ஒன்றல்ல,
ஆனாலும் ஒன்றுதான்.
“வேற்றுமையில் ஒற்றுமை காண்பது எவ்வாறு?”
“மனத்தால், உடலால் வேறு;
உணர்வால், உயிரால் ஒன்று.”
மனத்தால் (mentally),
உடலால் (physically) வேறு;
உணர்வால் (emotionally),
உயிரால் (consciousness) ஒன்று.
---------------------------------------------
ஆண்டவன் : தந்தை : ராஜன்.
ஆண்டவன் : தந்தை : ராஜன்.
---------------------------------------------



